உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 28ஆம் தேதி பிளிப்கார்டில் 22,000 மதிப்புள்ள ஸ்மார்ட் போனை ஆர்டர் செய்துள்ளார். அன்றைய தினமே அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. உடனே அவர் அந்த பாசலை திறந்து பார்த்தபோது உள்ளே ஸ்மார்ட்போன்க்கு பதிலாக கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த பதிலும் அளிக்காத நிலையில் X தளத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையில் flipkart நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.