தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்கு பிறகு 2022 ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் குரூப் 2 அறிவிப்பின்படி 5529 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குரூப் 4 அறிவிப்பின் கீழ் 7301 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் குரூப் 4 தேர்விற்கான பணியிடங்களில் 2500 பணியிடங்கள் மேலும் கூடுதலாக சேர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்பு டி என் பி எஸ் சி வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வு குறித்த விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

அதன் பிறகு ஓரிரு நாட்களில் குரூப்-1 தேர்வு குறித்த விபரங்கள் சேர்க்கப்பட்டு திருத்தப்பட்ட அட்டவணையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி முயற்சி செய்து வரும் நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9801 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து குரூப்-1,குரூப் 2 தேர்வு பற்றிய விவரங்களும் டிஎன்பிஎஸ்சி ஆணையத்தால் விரைவில் வெளியிடப்படும் எனவும் இதனால் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.