தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவ பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு 2400 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நேற்றுடன் பணிக்கான ஒப்பந்தம் முடிவடைந்தது.

இதற்கு முன்னதாக ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் அதிமுக அரசு முறையான விதிகளின்படி ஊழியர்களை நியமிக்கவில்லை எனவும் இதனால் சிக்கல் உள்ளதால் தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக அரசு விளக்கம் அளித்தது. இந்த நிலையில் 200400 செவிலியர்களின் வாழ்வாதாரம் மற்றும் குடும்ப நிலை காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னுரிமை அடிப்படையில் தேவைக்கு ஏற்ப நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் இவர்களுக்கு தேசிய சுகாதாரப் பணி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.