தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுற்றுலா அதிகாரி பதவிக்கு காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. பின்னர் வாய்மொழி தேர்வுக்கான பட்டியல் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு அதே வருடம் நவம்பர் மாதம் நடத்தப்பட்டது.

இந்த தேர்வுக்கான இறுதி முடிவுகள் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் வாய்மொழி தேர்வில் சேர்வதற்கு தேர்வு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் விவரங்களை உள்ளிட்டு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.