தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலாக பணிகளில் அடங்கிய ஆங்கில நிபுணர் மற்றும் தமிழ் நிபுணர் பதவிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்வு கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னை தேர்வு மையத்தில் நடத்தப்பட்டது. எழுத்து தெருவில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு கடந்த ஜனவரி மாதம் oral test நடத்தப்பட்டது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி முதல் கட்ட கவுன்சிலிங் வருகின்ற மே 24ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரியில் நேரில் சென்று கவுன்சிலிங் கலந்து கொள்ள வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.