சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்டிருந்த ஆகாய நடை மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று  திறந்து வைத்தார். அப்போது, அவரை காண காத்திருந்த தொண்டர்களில் ஒருவர் அவருடன் போட்டோ எடுக்க முயன்றார். ஸ்டாலின் அவர் அருகில் சென்றதும், போட்டோ எடுக்க தனது போனை அருகில் இருந்தவரிடம் கொடுக்க முயல, அந்த போனை ஸ்டாலினே வாங்கி அவருடன் இணைந்து செல்பி எடுத்தார்.

மேலும் அங்கு பெண்மணி ஒருவர் ஸ்டாலினுடன் சேர்ந்து செல்பி எடுக்க வந்தார். அப்போது, “செல்பி எடுக்கத்தெரியுமா” என முதல்வர் கேட்க, “தெரியாது, நீங்களே சொல்லித்தாங்க” என்றார் பெண்மணி. இதனால், சிரித்துக்கொண்டே செல்பி எடுத்துக்கொடுத்த முதல்வரின் செயல் அப்பகுதி மக்களை கலகலப்பாக்கியது.