தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை இருந்தும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.