குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது நித்யா ரஜத் என்ற சிறுவன் தலையில் காயங்களுடன் உள்ளோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக மார்பு பகுதி எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில் அப்போது வலது நுரையீரலில் மர்ம பொருள் ஒன்று இருந்துள்ளது.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சுவாச குழாயிலிருந்து பந்து ஒன்றை அகற்றினர். சமீப காலமாக இது போன்ற வழக்குகள் அதிகமாக வருவதாகவும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சிறுவன் பந்தை விழுங்கி இருப்பதும் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன் சிகிச்சை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.