பேங்க் ஆப் இந்தியா வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டுகள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக உங்களின் வங்கிகளை சென்று மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

இந்த செயல்முறையை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செய்ய தவறினால் நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது எனவும் வங்கி தொடர்பான அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு கட்டாயமாக மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகிழக்கு நேரடியாக சென்று மொபைல் எண்ணை மாற்றுவதற்கான படிவத்தை நிரப்பி பாஸ்புக் மற்றும் ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.