ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நவம்பர் 26 ஆம் தேதி இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜோத்பூரில் இருந்து இன்று இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஜலோர், ஆமதாபாத், சூரத், வர்தா, விஜயவாடா மற்றும் கூடூர் வழியாக நவம்பர் 28 மாலை 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயிலில் எட்டு குளிர்சாதன பெட்டிகள், ஐந்து படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.