அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதில் போட்டி போட்டு வந்தனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் பொதுக்குழு கூட்டங்கள் வருகிற மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி மார்ச் 5, 6, 7 மற்றும் மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததால் பொதுக் கூட்டங்களை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார்.