தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் செல்வி ஜெயலலிதா. இன்று செல்வி ஜெயலலிதாவின் 75-வது பிறந்த தினம். ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கு மரியாதை செலுத்தப்படும் என ஆளும் கட்சியான திமுக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை இயக்குனர்கள் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கலைஞர் கருணாநிதி மறைந்தார். அப்போது ஆளும் கட்சியான அதிமுக அரசு கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினத்தை கொண்டாடவில்லை. ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையோடு செல்வி ஜெயலலிதாவின் பிறந்த தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக தற்போது பார்க்கப்படுகிறது.