தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டும் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு நாள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கு பெரும் பேரணி இன்று நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பதாகைகளை மாணவர்கள் ஏந்தி செல்வார்கள்.

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சிறப்பு புகைப்பட கண்காட்சியில் இன்று தொடங்கப்பட உள்ளது. இந்த கண்காட்சி இன்று முதல் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு இருக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. சென்னை மாகாணம் கடந்த 1967ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்ற நிலையில் இதனை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.