இன்றைய தினம் ஜூலை 18 தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த தினம் குறித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற இருக்கிறது. இந்த பேரணியில்  தமிழ்நாட்டின் சிறப்பை எடுத்துரைக்கும் பாதகைகளை மாணவ மாணவிகள் கொண்டு செல்வார்கள்.

அதேபோன்று தமிழ்நாடு தினத்தின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்த அனைத்து மாவட்டத்தின் தலைநகரங்களிலும் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 23ஆம் தேதி வரை மாவட்ட தலைநகரங்களில் புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது.