சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தார்கள். இந்நிலையில் மலைப்பகுதியில் நீர்வரத்து இல்லாததால் வறண்டு போன செடி, கொடிகள் காய்ந்து சருகுகளான நிலையில் திடீரென பற்றிய காட்டுத்தீ வேகமாக பரவியது. இந்த சூழலில் சம்பவ பகுதிக்கு வனத்துறையினர் தற்போது வரை தீயை அணைக்க போராடிவருகின்றனர்.