தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப். 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தாலும், தேர்தல் கட்டுப்பாடுகள் ஜூன் 4 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, ஏப். 19 வரை மட்டுமே கட்டுப்பாடுகள் என நினைத்த தமிழக மக்கள், வணிகர்களின் தலையில் இடியாக வந்து இறங்கியிருக்கிறது.