நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் தொடங்கும் உறைபனிக்காலம் 75 நாட்கள் தாமதமாக தற்போது தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தாலும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் குளிர் காணப்படுகிறது.

உதகையின் தலைகுந்தாவில் இன்று ஜீரோ டிகிரிக்கு சென்றுள்ளது வெப்பநிலை. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பகல் வேளைகளில் 24 டிகிரி என்பது அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது.