ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த பயிற்சியாளர் சினிகிவே எம்போபு(37) நேற்று காலமானார். இவர்  இரண்டு மகளிர் உலகக்கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்கு பயிற்சியளித்தவர். அதாவது வீட்டில் இருக்கும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் மருத்துமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 15ஆம் தேதி அன்று தான் சினிகிவேவின் கணவரும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.