இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் விளையாடிய இந்தியா சூர்யகுமாரின் சதத்தால் 229 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடியது. இந்நிலையில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை தோல்வியை தழுவியுள்ளது. மேலும் இதனால் இந்தியா 2-1 என்ற வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றியுள்ளது.