புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் கடலூர், மயிலாடுதுறை, நாகை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு நாளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட உள்புற நோயாளிகள் பிரிவு வழக்கம் போல இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது