மகாராஷ்டிராவில் அகமது நகர் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த பூனையை காப்பாற்ற முயன்று ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாழடைந்த கிணற்றில் பூனை தவறி விழுந்ததை பார்த்த சிலர் அதனை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக கிணற்றுக்குள் குதித்துள்ளனர். இதில் கயிறு கட்டி இறங்கிய ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.