தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா அய்யனார் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பிறகு பேசிய அவர், பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் செய்யாத தலைவராக ஆட்சி செய்து வருகிறார். மூன்றாவது முறையும் அவர்தான் பிரதமராக வர இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.