விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் சாத்தூரில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அங்கு இருவரது வாகனமும் எதிரெதிரே வந்தபோது விஜய பிரபாகரன் வாகனத்தில் நின்றபடி பேசி கொண்டிருந்தார்.

எதிரே வந்த ராதிகா பரப்புரையை முடித்து விட்டு வாகனத்திற்கு உள்ளே சென்றார். இதையடுத்து ராதிகாவிடம் இருந்து பெண்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.