கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் அத்வைத் (28), டாக்டர் அஜ்மல் (28) ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் கூகுள் ஜிபிஎஸ்ஸை நம்பி காரில் சென்றுள்ளனர்.இந்த நிலையில்  கனமழை காரணமாக சாலை தெரியவில்லை. அப்போது சாலையில் தண்ணீர் இருப்பதாக நினைத்து காரை முன்னோக்கி சென்றுள்ளனர். அதனால்  கார் ஆற்றுக்குள் சென்று மூழ்கியது. இந்த சம்பவத்தில் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.