உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனின் புகழ்பெற்ற ‘ராபர்ஸ் கேவ்’ சுற்றுலாத் தளத்திற்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். குச்சுபானி என்றும் அழைக்கப்படும் இந்த இயற்கை குகைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர், அங்கிருக்கும் அமைதியான சூழலைக் கெடுக்கும் வகையில் நடந்துகொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், இளைஞர்கள் குழு ஒன்று குகைக்குள் உரத்த சத்தத்துடன் பாட்டுப் பாடி நடனமாடிக் கொண்டு செல்வதைக் காண முடிகிறது. இதில் ஒரு இளைஞர் தனது தலையில் பெரிய பூம்பாக்ஸ் ஸ்பீக்கரைச் சுமந்து செல்ல, அதில் ஹரியான்வி பாடலான ‘லோஃபர்’ உரத்த சத்தத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அவருக்குப் பின்னால் வரும் மற்ற இளைஞர்களும் பாடலின் மெட்டுக்கு ஏற்ப கைகளை உயர்த்தி ஆடிக்கொண்டே செல்கின்றனர். அங்கிருந்த குடும்பங்களும் மற்ற சுற்றுலாப் பயணிகளும் அமைதியை விரும்பி வந்த நிலையில், இந்த இளைஞர்களின் செயலால் பெரும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர். எனினும், யாரும் அவர்களைத் தடுத்துக் கேட்கவில்லை.

‘ஹிமாலயன் ஹிந்து’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்தக் காணொளி இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. இயற்கை சூழலையும் அமைதியையும் அனுபவிக்க வரும் இடங்களில், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இப்படி சத்தமாக இசை அமைப்பது தவறான செயல் எனப் பல பயனர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Someone ban these HR LOFARS from Uttarakhand pls. How do you even behave like this in public? This is stone age mentality. And listen to their songs… 'Lofar they Haryana ke'. They literally admitted themselves that they are lofars. Btw this was at Gucchupani, Dehradun. pic.twitter.com/M6R827v7wr

— Himalayan Hindu (@himalayanhindu) August 18, 2026

“>

சுற்றுலாப் பயணிகள் தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் அமைதியைப் பாழ்படுத்தக் கூடாது என்றும், இதுபோன்ற பொது இடங்களில் உள்ளூர் அதிகாரிகள் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.