ஜம்மு – காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்- ஹைமனா என்னும் பகுதியில் லித்தியம் தனிமம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. செல்போன் டிஜிட்டல் கேமரா மற்றும் லேப்டாப் போன்ற பல்வேறு சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரியின் முக்கிய பொருளாக லித்தியம் கனிமம் விளங்குகிறது. இந்த கனிமத்தை 100% இறக்குமதி செய்யும் இந்தியா தற்போது காஷ்மீரில் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதனால் இதன் இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பயங்கரவாத அமைப்பு ஜம்மு – காஷ்மீரின் வளங்களை திருட விட மாட்டோம் என மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் காஷ்மீரில் லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மக்களின் பாசிச எதிர்ப்பு முன்னணி என்னும் பயங்கரவாத அமைப்பு மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பயங்கரவாத அமைப்பு கூறியதாவது, “எந்த சூழ்நிலையிலும் ஜம்மு – காஷ்மீரின் வளங்களை திருட, சுரண்ட விடமாட்டோம். இந்த வளங்களை மக்களுக்கு சொந்தமானது. அது ஜம்மு – காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். மோசமான இந்துத்துவ திருடர்கள் எங்கள் வளங்களை திருடுவதற்கு அனுமதி இல்லை. மேலும் ஜம்மு – காஷ்மீருக்கு நுழைய நினைக்கும் இந்திய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். ஜம்மு – காஷ்மீர் மட்டுமல்லாமல் இந்தியாவிற்குள்ளும் நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என அந்த பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது”. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.