ஜனவரி 22ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

மெக்கா, ஜெருசலேம் போன்ற தளங்களுக்கு செல்வதற்கு சலுகைகள் அளிக்கப்படுவது போல் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதற்கும் மாநில அரசு சார்பில் சலுகைகள் அறிவிக்க வேண்டும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.