தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அம் மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி நான்காம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.