காலி மனைகள் மற்றும் வீடுகளில் சோலார் பேனல்களை பொருத்துபவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சோலார் ரூஃப் டாப் திட்டத்தின் கீழ் சோலார் பேனல்களுக்கான மானியத்தை மேலும் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு கிலோ வாட் ஒன்றுக்கு 14 ஆயிரத்து 400 ரூபாய் வழங்கப்பட்டு வந்த மானியம் 18,000 ரூபாயாகவும், நான்கு முதல் பத்து கிலோ வாட் வரையிலான மானியம் 7600 லிருந்து 9 ஆயிரம் ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.