ஜேஎன் கொரோனா வைரஸானது மீண்டும் பரவி வருகிறது. இதனால் பொதுஇடங்களில் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் உடல்நிலை சரியில்லை என்றால் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 1100ஐ தாண்டியுள்ளது. பெங்களூருவில் மட்டும் பாதிப்புகள் 700ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. காய்ச்சல்,சளி, இருமல், பிரச்னைகள் இருந்தால் மாணவர்களை வீட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.