நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அரியவகை மரங்களை வெட்டி கடத்த முயன்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த லாரியை மடக்கிப்பிடித்த போலீசார் சோதனை செய்தனர்.

அதில் 26 மரக்கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து பின்னர் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டதாக ஓட்டுனர் உட்பட இரண்டு பேரை கைது செய்த போலீசார் இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.