தேச விரோத நடவடிக்கையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டால் தகவல் தெரிவிக்கும்படி NIA தொடர்பு எண்கள் மற்றும் ஈமெயில் முகவரி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மை இல்லை என்று NIA மறுப்பு தெரிவித்துள்ளது. NIA India என்ற twitter பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தவறான கருத்துக்களை பரப்பி இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.