லடாக்கின் மவுண்ட் குன் பகுதியில் இந்திய ராணுவத்தின் 40 வீரர்கள் அடங்கிய குழு. பயிற்சி ஈடுபட்டு வந்துள்ளது. அப்போது, திடீரென ஏற்பட்ட பனி சரிவில் 4 வீரர்கள் சிக்கியுள்ளனர். அதில் உயிரிழந்த ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், 3 வீரர்களை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.