சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையும் செலுத்த வேண்டும்.

இதில் இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்துபவருக்கு மாநகராட்சி சார்பாக 5 சதவீதம் ஊக்கத்தொகை அதிகபட்ச மைந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை கைப்பேசி மற்றும் சொத்து வரி ரசீதில் உள்ள கியூ ஆர் குறியீடு மூலம் சொத்து வரியை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.