விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பை கொண்டு விவாதிக்கப்படும். இதனைப் போலவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியை பழனி கருப்பன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் மனைவியின் புடவை ஆசை குறித்து பேசப்பட்டுள்ளது. அதில் அப்பாவிகளாக இருக்கும் கணவன்மார்கள் மனைவியிடம் என்ன பாடு படுகிறார்கள் என்பதை காண முடிகிறது.

அதில் பெண் ஒருவர் திருமணத்திற்கு 10 கடைகள் ஏறி இறங்கி இறுதியாக 20 ஆயிரத்திற்கு ஒரு புடவையை வாங்கியுள்ளார். ஆனால் அதற்கான சட்டைக்கு மட்டும் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரின் கதையும் மிகவும் வித்தியாசமாக பார்வையாளர்களை வாய் அடைக்க வைத்துள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகிறது.