செல்வமகள் சேமிப்பு திட்டம் உங்களது செல்ல மகளை லட்சாதிபதியாக மாற்றும். இதற்காக உங்களது மகள் பிறப்பில் இருந்தே முதலீடு செய்ய துவங்கவேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது மகள்களின் பெயரில் கணக்கு துவங்கலாம். செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 18 வருடங்களுக்கு பின் பாதித் தொகையை திரும்பப்பெறலாம். 21 வருடங்கள் நிறைவடைந்ததும் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். மகளின் படிப்பு முதல் திருமணம் வரை உள்ள செலவுகளை சமாளிக்கும் விதமாக இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் வட்டித் திருத்தம் செய்யப்படும்.

ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்குரிய வட்டி விகித்தினை அரசாங்கம் உயர்த்தி இருக்கிறது. தற்போது நடப்பு ஆண்டு வட்டி 8% ஆக உள்ளது. முன்பாக இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு வருடந்தோறும் 7.60% வட்டியை வழங்கியது. அதன்படி, 2024 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வட்டி 40 bps அதிகரித்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தபால் அலுவலகத்தில் கணக்கு தொடங்கலாம். சுகன்யா சம்ரிதி கணக்கில் வருடத்துக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதலீடு செய்யவேண்டும். இதில் வருடந்தோறும் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

அதோடு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இக்கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கான வரிச்சலுகையும் கிடைக்கும். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒருவர் தன் குழந்தை பிறந்த உடனேயே SSY திட்டத்தில் ஒரு கணக்கை திறந்து 12 தவணைகளில் ரூ.12,500 முதலீடு செய்து இருந்தால், இக்கணக்கின் முதிர்ச்சியில் 8% வட்டி வருமானம் கிடைக்கும். செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் தொடர்ச்சியான முதலீட்டிற்கு பின், மகளுக்கு 21 வயதாகும்போது முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறலாம். இந்த திட்டத்தின் முதிர்ச்சியின்போது சுமார் 60 லட்சத்தை பெறலாம்.