தெலங்கானாவின் ஆசிபாபாத் மாவட்டத்திலுள்ள பாபாபூர் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் சச்சின் கடந்த மே 18 ஆம் தேதி தன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஷாப்பிங் செய்ய வெளியில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து உள்ளார். இதையடுத்து சச்சின் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் சச்சின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சச்சினுக்கு ஏற்பட்ட சம்பவத்தை போல் மத்தியபிரதேசத்திலும் கடந்த ஜனவரி மாதம் ஒரு சம்பவம் நடந்தது. பள்ளியில் குடியரசுதின ஒத்திகையின் போது மயக்கம் போட்டு விழுந்த 11-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.