நாய் வளர்ப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘லாயல்’ என்ற பயோடெக் நிறுவனம், நாய்களின் முதுமையைத் தள்ளிப்போட்டு அவை நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ ‘LOY-002’ என்ற புதிய மாத்திரையை உருவாக்கி வருகிறது. 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 14 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ள நாய்களுக்காக இந்த மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது நாய்களின் உடலில் உள்ள ‘IGF-1’ என்ற ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், வயது முதிர்வால் ஏற்படும் நோய்களைத் தடுத்து, அவற்றின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது இந்த மருந்து 1,300-க்கும் மேற்பட்ட நாய்களிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
<a href=”http://

“>

இந்த மருந்து குறித்த ஆரம்பகட்ட முடிவுகள் மிகவும் நம்பிக்கையளிப்பதாக உள்ளன. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நடத்திய ஆய்வில், இந்த மாத்திரையால் நாய்களுக்கு எவ்விதமான மோசமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்து நாய்களின் ஆயுளை செயற்கையாக நீட்டிப்பதை விட, அவை முதுமையிலும் நோயின்றி சுறுசுறுப்பாக வாழ்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போதைய சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், 2026 அல்லது 2027-ஆம் ஆண்டிற்குள் இந்த மாத்திரைவிற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நம் செல்லப் பிராணிகளுடன் கூடுதல் காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க முடியும்.