மிக்ஜாம் புயல் தீவிரமடைந்ததால் சென்னையில் விடிய, விடிய மழை கொட்டி வருகிறது. சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்யும் கன மழையால் மாநகரில் உள்ள பல பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இந்த நிலையில் சென்னையின் முக்கிய சாலையான வடபழனி 200 அடி சாலையில் தேங்கிய மழை நீரால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து செல்கிறது. மேலும் பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கும் சூழலில், புதர்களில் வெள்ளம் புகுந்து பாம்புகள், விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்துவிட வாய்ப்புள்ளது. எனவே, பாம்புகளை பிடிப்பவர்களின் விவரங்களை வனத்துறை பகிர்ந்துள்ளது.

*கோயம்பேடு-பாபா 9841588852,

*பெரம்பூர்-சக்தி 9094321393,

*அண்ணாநகர்-கணேசன் 7448927227,

*குரோம்பேட்டை-ஜெய்சன் 8056204821,

* ராயபுரம்-நாகேந்திரன் 9940073642 ஆகியோரை அழைக்கலாம்