சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூர் செல்வதற்கு 4.20 மணி நேரத்தில் பயணிக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், முதல் 6:30 மணி நேரம் பயணிக்கும் எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரை பத்துக்கு மேற்பட்ட தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும்  டபுள் டக்கர் வசதி என்பது பயணம் செய்வோருக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுக்கிறது. ஒரே ரயிலில் தரைதளம், முதல் தளம் என மாடி  வீட்டில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்கிறது.

நாடு முழுவதும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே டபுள் டெக்கர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வகை ரயில்கள் பகல் நேரத்தில் மட்டும் தான் இயக்கப்படும். அதேபோல இருக்கைகள் இடம்பெற்றிருக்கும். தரைத்தளம், முதல் தளம் என வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் கூடுதல் பயணிகளை ஏற்றி செல்ல முடியும். அதுமட்டுமல்லாமல் அகலமான ஜன்னல்கள் ரம்மியமான காட்சிகளை அற்புதமாக விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் பல மடங்கு குறைவான டிக்கெட் கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது . அதற்கேற்ப பயண நேரமும் அதிகம் என்று வைத்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, சென்னை – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி சேர் காரில் 995 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 1885 ரூபாயும் டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதன் பயண நேரம் 4 மணி 20 நிமிடங்கள் ஆகும்.

இதில் கூடுதல் சிறப்பம்சமாக சமீபத்தில் ஒரு விஷயம் அரங்கேறியுள்ளது. முன்னதாக 10 ஏசி டபுள் டெக்கர் ஏசி பெட்டிகள் இருந்தன. தற்போது 8 ஏசி டபுள் டெக்கர் ஏசி பெட்டிகளும், 5 ஏசி அல்லாத சாதாரண பெட்டிகளும், ஒரு பொது வகுப்பு பெட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. இது சாமானிய ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.