பிப்.26ம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை வீடுவீடாக மேற்கொள்ள வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியலிலும், கட்சியிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கலாம்.

அடிமட்ட தொண்டர்கள் வரையிலான அனைத்து விவரங்களையும் தலைமை கழகம் அறிந்துள்ளது. 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். பாஜகவின் அநீதிகள் மற்றும் திமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பேசியுள்ளார்.