சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வாடகை வீட்டில் 2500 சிம் கார்டுகளை பதுக்கிய கேரள தம்பதியை போலீஸ் தேடி வருகிறது.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வாடகை வீட்டில் 2500 சிம் கார்டுகளை தம்பதி ஒன்று பதுக்கியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பஷீர் மற்றும் சஜீனா தம்பதி தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமான அழைப்புகள் சென்றுள்ளன. வருவாய் இழப்பு ஏற்பட்டதை அடுத்து சந்தேகம் அடைந்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உரிமையாளர் முன்னிலையில் தம்பதி இருந்த வீட்டை திறந்து சோதனையிட்ட போது 2500 சிம் கார்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வில் சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அழைப்புகள் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. காவல்துறை உதவியுடன் ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள வீட்டிற்கு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சென்றபோது தம்பதி தப்பினர். இதையடுத்து கேரள தம்பதியை போலீஸ் தேடி வருகிறது.