தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் -1 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் பத்து தல, சிவகார்த்திகேயனின் அயலான், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் ஆகிய சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் ரகுமான் சென்னை அண்ணா சாலையிலுள்ள தர்கா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இஸ்லாமியர்களின் வழிபாடு முறையான சந்தனக்கூடு எனும் 15 நாட்கள் நடைபெறும் நிகழ்விற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. பிறை தெரிந்ததும் சந்தனக்கூடு நிகழ்வுக்கான அறிவிப்பு வெளியாகியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று தொழுகை மேற்கொண்டார்.