சென்னையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றில் நேருடன் வந்து கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.