சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் பிரபலமான வணிக வளாகமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் கடைகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என ஏராளமான அம்சங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் பல்வேறு விதமான உணவகங்களும் உள்ளது.

இங்குள்ள உணவகம் ஒன்றில் திடீரென இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகத்தில் இருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து மயிலாப்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.