தமிழக அரசின் சேவைகள் மக்களுக்கு முதல்வர் சிறப்பு திட்ட முகாம்கள் வார்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்களில் 3809 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இன்று ஏழு இடங்களில் இந்த முகம் நடைபெற உள்ளது.

அதன்படி திருவொற்றியூர், சாத்தங்காடு ஜிஆர்டி திருமண மண்டபம், வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி, மரைக்காயர் தெரு ஆஷா மஹால், மண்ணடி சீதக்காதி தெரு சச்சிதானந்தம் சமூக நலக்கூடம், எம் எம் டி ஏ சென்னை உயர்நிலை பள்ளி, கே.பி. தாசன் சாலை மாநகராட்சி சமூக நலக்கூடம் மற்றும் மீனம்பாக்கம் காமராஜர் தெரு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் உரிய ஆவணங்களுடன் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.