ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் எருமை பால் மற்றும் பசும்பால் இரண்டுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடுபொருட்களின் விலை உயர்வை ஈடு செய்ய ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.