தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக சுப்ரமணியனும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நாகராஜனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனைப் போலவே நில நிர்வாகத்துறை ஆணையராக கே எஸ் பழனிசாமியும், மீன்வளத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையராக ஜடக் சிருவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.