சென்னை சென்ட்ரல் மற்றும் கூடூர் வழித்தடத்தில் திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் தயிர் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அக்டோபர் 22 இன்று 23 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மூர்மார்க்கெட்டிலிருந்து சூலூர்பேட்டைக்கு காலை 4.20, 5 , 5.20, 7.30, 7.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்,மறுமார்க்கமாக சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு காலை 5 மணி, 5.40, 6.40 மணிக்கு புறப்படும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் மொத்தமாக இன்று  23 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இன்று  காலை 4.20, 5 மணி, 5.20, 5.40, 6.25, 6.50, 7.30, 7.45, 8.15 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.