சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் புளியந்தோப்பு பகுதியில் நவம்பர் 4 இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அயனாவரத்தில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் ஸ்ட்ரஹான்ஸ் சாலை சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் ஒட்டேரி சந்திப்பில் நிறுத்தப்படும்.

அதற்கு பதில் குக்ஸ் சாலை – ஸ்டீபன்சன் சாலை – அம்பேத்கர் கல்லூரி சாலை மற்றும் பேரக்ஸ் கேட் சாலை வழியாக பெரம்பூர் சாலை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரஹான்ஸ் சாலையின் முழு பகுதியும் ஒரு வழியாக செயல்படும் எனவும் ஒட்டேரி சந்திப்பில் இருந்து ஸ்ட்ரஹான்ஸ் சாலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.